MS Dhoni: ‘ராஜ்வர்தனுக்கு ஏன் வாய்ப்பு கொடுக்கல’…திறமையற்றவரா? தோனியின் பதில் இதுதான்!


MS Dhoni: ‘ராஜ்வர்தனுக்கு ஏன் வாய்ப்பு கொடுக்கல’…திறமையற்றவரா? தோனியின் பதில் இதுதான்!


ஐபிஎல் 15ஆவது சீசன் 68ஆவது லீக் போட்டியில்சென்னை சூப்பர் கிங்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதின. இதில் டாஸ் வென்ற சிஎஸ்கே முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது.

சிஎஸ்கே இன்னிங்ஸ்:

முதலில் களமிறங்கிய சிஎஸ்கேவில் ஜாஸ் பட்லர் (2), சஞ்சு சாம்சன் (15) ஆகியோர் அடுத்தடுத்து ஆட்டமிழந்த போதும், பவர் பிளேவில் மொயின் அலி காட்டடி அடித்து ரன்களை குவிக்க ஆரம்பித்தார். குறிப்பாக, போல்ட் வீசிய பவர் பிளேவின் கடைசி ஓவரில் ஒரு சிக்ஸர், 5 பவுண்டரிகளை மொயின் பறக்கவிட்டார்.

பவர் பிளேயை தொடர்ந்து, ரன்கள் அதிகம் கசியவில்லை. குறிப்பாக மிடில் ஓவர்களில் பவுண்டரியை செல்லவில்லை. இறுதியில் தோனி 26 (28), மொயின் அலி 93 (57) ஆகியோர் பார்ட்னர்ஷிப் அமைத்து, நிதானமாக ரன்களை சேர்த்து ஆட்டமிழந்தனர். மற்றவர்கள் ஒற்றை இலக்க ரன்களை மட்டுமே அடித்தார்கள். இதனால், சிஎஸ்கே 20 ஓவர்களில் 150/6 ரன்களை மட்டுமே சேர்த்தது.

தோனி பேட்டி:

இப்போட்டி முடிந்த பிறகு பேசிய தோனியிடம், ராஜ்வர்தனுக்கு ஏன் வாய்ப்பு கொடுக்கவில்லை என நெறியாளர் கேள்வி எழுப்பினார். அதற்கு பதிலளித்த தோனி, “ராஜ்வர்தன் நல்ல வேகம், பவுன்ஸ் ஆகியவற்றில் சிறப்பாக செயல்படுகிறார். இருப்பினும், அவர் இன்னமும் முன்னேற்றமடைய வேண்டும். அணி வீரர்களுடன் தொடர்ந்து பயிற்சியில் ஈடுபட்டு வந்தார். இதன்மூலம், அவரது பந்துவீச்சு மேம்பட்டிருக்கும் என நம்புகிறேன். சரியான பயிற்சி, அதிக அளவில் உள்ளூர் போட்டிகளில் விளையாடாமல் ஐபிஎலில் விளையாட வைத்தால் அது நன்றாக இருக்காது. இதனால்தான் இந்த சீசனில் களமிறக்கவில்லை” எனக் கூறினார்.

Comments

Popular posts from this blog

Tropical Girl Canvas Print by thindesign #Girl

How to Make Moroccan Chicken Tagine With Potatoes and Carrots #Tagine

வங்கி வாடிக்கையாளர்களுக்கு ஷாக் நியூஸ்... அக்டோபர் மாதத்தில் 21 நாட்கள் விடுமுறை?289294326